மழை

0 comments
மண்ணின் மனமும்
பெண்ணின் குணமும்
தென்னையின் வளமும்
விண்ணளவு சுரக்கும் பொன்னாம் !!

பசுமையின் சிறப்பும்
கருமையின் விரிவும்
பெருமையென கொணரும்
புதுமையென பொழியும் அழகாய்!!

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்
மக்களுக்கு உயிரூட்டும் உணவாய்
மனமும் குணமும்
மனதோடு நிறைந்திடும் இதமாய் !!

பழமையும் புதுமையும்
பரவசமாய் படர்ந்திடும் பதமாய்
பன்னீரூம் செழுநீரும்
விண்ணின் நீராகும் சிறப்பாய்!!

கானல் நீரும் காணா நீராகி
காதல் புரியும் காற்றாகி
கண் முன்னே சுரக்கும் உயிராகி
வெண் மேகம் பொழியும் அருவியாய் !!











Recent Posts

Recent comments

Followers