ஆயுதம் ஏந்தா
அறநெறி நடத்தும் அரசாட்சி!!
அன்று முதல் இன்று வரை
தொடரும் சூழ்ச்சி!!
வீசும் காற்றிலும்
வாசம் தன் வசம் வேண்டுமென
வீரம் பேசும்!!
நேசமோ உண்டு இவனிடம்
வேஷமும் உண்டு சிலரிடம் !
தேசங்கள் வேறுபட்டாலும்
சுவாசம் ஒன்றென பறைசாற்றும் ஆண் வாசம்!!
தேடும் இன்பமும்
தேடா துன்பமும்
மீண்டும் வேண்டாமென
நாளும் கதை பேசும் !!
வேறிடம் போக மனம்
- புகா பாசமும் உண்டு
சேரிடம் சிறப்பினை
சீராய் பரவும் குணமும் உண்டு!!
நூற்றாண்டு கடப்பினும்
நூறு விதிகள் போடும்
நூலிழையில் நூலகம்
நடத்தும் நெறியும் உண்டு !!
Subscribe to:
Posts (Atom)

